தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் விரும்புகிறார்கள். முதல் மார்க் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இதற்காக குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுப்பது, கூடுதல் நேரம் படிக்க வைப்பது, டிசன் அனுப்புவது, யோகா வகுப்பிற்கு செல்லச் சொல்வது, தியானம் செய்ய வலியுறுத்துவது, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்துக் கொடுப்பது என விதவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
இவற்றைவிட வீட்டில் சிறு நூலகம் இருந்தாலே குழந்தைகளின் ஆர்வம் இயல்பாகவே கல்வியின் பக்கம் திரும்பிவிடும் என்கிறது புதிய ஆய்வு. அமெரிக்காவின் [...]
வன்னியில் இடம்பெற்ற போரினால் பெற்றோரை இழந்த 149 சிறுவர் சிறுமியர் வவுனியா, செட்டிக்குளம் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு வயதுகளை உடைய சிறுவர் சிறுமியர் இவ்வாறு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டு சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் 30 மாணவ மாணவியரும் இந்த முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பத்து மாதங்களுக்கு முன்னர் பெற்றோரை இழந்த 225 பிள்ளைகள் குறித்த முகாமில் தங்கியிருந்ததாகவும், இதில் 86 குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் [...]
அண்மையில் TDESAA City Championship விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட தமிழ் மாணவனான கவிந்த் பைந்தமிழ்க்குமரன் குண்டெறியும் போட்டியில் தரம் 5 ம் பிரிவில் சாம்பியனாக வந்துள்ளார்.
ஈற்றோபிக்கோ நகரில் உள்ள ஜோன் டி. பார்க்கர் கனிஸ்ட பாடசாலையில் கல்விகற்று வரும் மாணவன் கவிந்த் தன்னோடு போட்டிக்கு வந்த சுமார் 16 மாணவர்களை தனது ஆற்றலினால் வெற்றி கொண்டு சாம்பியனாக வந்துள்ளார்.
கடந்த 21ம் திகதி ஸ்காபுறோ பேர்ச்மவுன்ட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் இந்தச் சிறுவயதில் [...]
கீபோர்ட்…. வாத்தியத்தினை தொடர்ந்து 53 மணி நேரம் வாசித்து இதற்கு முன்னர் அமெரிக்கரான Randy Rumbelow ஏற்படுத்தியிருந்த முன்னைய உலக சாதனையை மேலும் 9 மணி நேரம் 15 நிமிடங்கள் அதிகமாக வாசித்ததன் மூலம் … முறியடித்து.. புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளார்… துஷ்யந்தன்!
இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் சத்தியமூர்த்தி தொடர்ச்சியாக சுரத்தட்டு இசை (Keyboard) மீட்டி புதிய உலக சானையை நிலைநாட்டியுள்ளார். ஒரு வயதுக் குழந்தையாக யேர்மனிக்கு தனது குடும்பத்தவர்களுடன் இடம் பெயர்ந்த இவர், இலங்கையின் திருநெல்வேலியைப் [...]
கிஷாந்தியின் குடும்பம் 3 ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தது. இவரது தந்தை ரவீந்திரன் சென்னை விருகம்பாக்கத்தில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் சென்னை, அசோக் நகர் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தார். இம் மாணவி பெற்ற மதிப்பெண்: தமிழ்- 96, ஆங்கிலம்- 95, கணிதம்- 99, அறிவியல் -99, சமூக அறிவியல்- 97.
சாதனை குறித்து கிஷாந்தி கூறியதாவது:
இலங்கையில் தமிழ் வழியில் 8-ம் வகுப்பு வரை பயின்றேன். சென்னையில் 9-ம் வகுப்பில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் [...]
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரிடையே கடுமையான குறைபோசாக்கு நிலவி வருவதாக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சனத்தொகைப் பரம்பல் மற்றும் போசாக்கு நிலைமை குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் குறைபோசாக்கு நிலைமை 29 வீதமாக காணப்படுவதாகவும், வடக்கு கிழக்கில் சிறுவர் குறைபோசாக்கு நிலைமை 46 வீதமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரும்புச் சத்து, சின்க் சத்து, அயடீன் சத்து மற்றும் விட்டமின் ஏ சத்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று [...]
இரண்டு கைகளும் கால்களும் இல்லாமல் 04.12,1982ல் அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் என்ற நகரத்தில் பிறந்த இவர். அவுஸ்ரேலியாவில் உள்ள பிரபல்யமான Main stream school என்ற பாடசாலையில் படித்து வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார்
2009ம் ஆண்டு இடம்பெற்ற ஜி.சீ.ஈ. சாதரணதர பரீட்சையின் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
யாழ்/கரணவாய் மகாவித்தியாலயத்தை சேர்ந்த புஸ்பராஜா தாஸ்மோகன் 6A.2B,1S எஸ் என்ற பெறுபேறுகளையும், யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியை சேர்ந்த தாரணி ஞானசேகரன் 6A.2B,1S என்ற பெறுபேறுகளையும், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியை சேர்ந்த துஷியங்கா தெய்வேந்திரம் 7A.B.C என்ற பெறுபேறுகளையும், யாழ் மத்திய கல்லூரியை சேர்ந்த ப.பனோஜன் என்பவர் 7A,2B என்ற பெறுபேறுகளை பெற்று தமது கல்லூரிக்கும், தமது பெற்றோருக்கும், தமது ஊருக்கும், தாம் வசிக்கும் [...]
யுத்த காலத்தின்போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள் என கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் 100 பெண்பிள்ளைகள் முதற்கட்டமாக மாதவ ஆச்சிரமத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக வடமாகாண பொதுநிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் தி.இரசநாயகம் குறிப்பிட்டார்.
உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது.
அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.
நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் [...]